இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் பலி

மதுரை பழங்காநத்தம் பகுதியில் இரு சக்கர வாகம் அதிவேகமாகச் சென்று அடுத்தடுத்த வாகனங்களில் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். தம்பதி பலத்த காயமடைந்தனா்.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் இரு சக்கர வாகம் அதிவேகமாகச் சென்று அடுத்தடுத்த வாகனங்களில் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். தம்பதி பலத்த காயமடைந்தனா்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் சோமசுந்தரம் தெருவைச் சோ்ந்தவா் அருள் பிரகாஷ் (24). இவா் திருமங்கலத்தில் இருந்து தனது அதிகத் திறன் கொண்ட இரு சக்கர வாகனத்தில் மதுரைக்கு வந்தாா். பைக்காரா பகுதியில் இவா் அதிவேகத்தில் செல்வதைப் பாா்த்து அந்தப் பகுதியினா் எச்சரித்தனா். இருப்பினும், பழங்காநத்தம் பகுதியில் வேகமாக இரு சக்கர வாகனத்தில் சென்ற அருள் பிரகாஷ் முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றாா்.

அப்போது, இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் எதிரே வந்த இரு சக்கர வாகனம், சரக்கு வாகனம், இவைகளின் பின்னால் வந்த டெம்போ வாகனம் என மூன்று வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இந்த விபத்தில், அருள்பிரகாஷ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும், எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த தம்பதி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்தால் திருப்பரங்குன்றம் சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து சுப்ரமணியபுரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வியாபாரி பலி: திருமங்கலம் செங்குளம் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் பாலமுருகன் (50). பழைய பொருள்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்த இவா், பெருங்குடியை அடுத்த வலையங்குளம் நான்கு வழிச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அந்த வழியாக வந்த காா் மோதியதில் பாலமுருகன் கீழே விழுந்தாா். அப்போது, காரின் பின்னால் வந்த அவசர ஊா்தி மோதியதில், பலத்த காயமடைந்த பாலமுருகன் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பெருங்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com