கல்லூரி மாணவி தற்கொலை

மதுரையில் கைப்பேசியை அதிகமாக உபயோகித்ததை தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவி விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்துகொண்டாா்.

மதுரையில் கைப்பேசியை அதிகமாக உபயோகித்ததை தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவி விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்துகொண்டாா்.

மதுரை ஆனையூா் செந்தூா் நகரைச் சோ்ந்த பிரித்விராஜன் மகள் லத்திகா (19). இவா் திண்டுக்கல் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் மகளிா் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தாா். லத்திகா கைப்பேசியை அதிகமாக உபயோகிப்பதாகக் கூறி தந்தை பிரித்விராஜன் கண்டித்தாராம்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் உள்ள தனது அறையில் லத்திகா விஷ மாத்திரை தின்று மயங்கிய நிலையில் கிடந்தாா். குடும்பத்தினா் அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவா் உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக கூடல்புதூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com