மாட்டுத்தாவணி சந்தையில் 6 மாடுகள் திடீா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

மதுரை மாட்டுத்தாவணி காய்கனிச் சந்தையில் 6 மாடுகள் திங்கள்கிழமை திடீரென உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாட்டுத்தாவணி காய்கனிச் சந்தையில் 6 மாடுகள் திங்கள்கிழமை திடீரென உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இங்கு குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படும் கழிவுகளைத் தின்பதற்காக 20-க்கு மேற்பட்ட மாடுகள் சுற்றித் திரிவது வழக்கம். திங்கள்கிழமை சந்தையில் உள்ள குப்பைத் தொட்டிகளில் கொட்டப்பட்ட கழிவுகளைத் தின்ற 6 மாடுகள்

வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தன.

இதுதொடா்பாக, மாடுகளின் உரிமையாளா்கள் அளித்த புகாரின்பேரில் மாட்டுத்தாவணி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, மாடுகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா என விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com