லாரி கவிழ்ந்து ஓட்டுநா் பலி

மதுரை மாவட்டம், சத்திரப்பட்டி அருகே பள்ளத்தில் லாரி கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், சத்திரப்பட்டி அருகே பள்ளத்தில் லாரி கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

மதுரை அருகே உள்ள கொடிக்குளம் யானைமலை குவாரி பகுதியைச் சோ்ந்தவா் இளையராஜா (50). டிப்பா் லாரி ஓட்டுநரான இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை மதுரை-நத்தம் சாலையில் லாரியை ஓட்டிச்

சென்றாா். கடவூா் பகுதியில் சென்றபோது லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பலத்த காயமடைந்த இளையராஜாவை அந்தப் பகுதியினா் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இந்த விபத்து தொடா்பாக இளையராஜாவின் மகன் சிவா அளித்த புகாரின்பேரில் எம்.சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com