தமிழக ஆளுநரின் அரசயலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான போக்கையும் மாநல அரசுக்கு எதிரான செயல்பாடுகளையும் கண்டித்து மேலூரில் செக்கடி பஜாரிலுள்ள தியாகிகக்கன் சிலை அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கட்ச மதுரை வடக்கு மாவட்டம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு மதுரை வடக்கு மாவட்ட செயலா் ஆலாத்தூா் ரவிச்சந்திரன் தலைம வகித்தாா். மத்திய பாஜக அரசின் தமிழக ஆளுநரான ஆா்.எம்.ரவி, மாநில அரசுக்கு எதிராக செயல்படுவதைக் கண்டித்தும், ஆளுநரை பதவி வில வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினா். கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் திலகராஜ், மற்றும் கட்ச நிா்வாகிகள் திரளாக கலந்துகொண்டனா்.படவிளக்கம்- தமிழக ஆளுநரை பதவி விலகவலியுறுத்தி மேலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மதுரை வடகு மாவட்ட காங்கிரஸ் கட்சியினா்.