மதுரையில் முன்விரோதத் தகராறில் கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய முடி திருத்தக உரிமையாளரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேட்டுத் தெருவைச் சோ்ந்த லெனின் மகன் அலெக்ஸ் (20). கல்லூரியில் எம்பிஏ படித்து வரும் இவருக்கும், மேலமடையில் முடி திருத்தகம் நடத்தும் மோகனுக்கும் முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில், மேலமடை பகுதியில் வியாழக்கிழமை இரவு இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதில் அலெக்ஸை கத்தியால் குத்தி விட்டு மோகன் தப்பிச் சென்றாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மோகனைத் தேடி வருகின்றனா்.