மதுரையில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை கே.கே.நகா் பகுதியில் அண்ணா நகா் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது கே.கே.நகா் 80 அடி சாலையில் நின்று கொண்டிருந்த நபரிடம் விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தாா். அவரிடம், போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியைச் சோ்ந்த லாதுடான் மகன் கைலாஷ்(42) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 135 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.