மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: காமராஜா் பல்கலை. பேராசிரியா் கைது

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அந்தப் பல்கலைக்கழகப் பேராசிரியரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அந்தப் பல்கலைக்கழகப் பேராசிரியரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிபவா் கருப்பையா (52). இவா் சமூகவியல் புலத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறாா். இந்த நிலையில், பேராசிரியா் கருப்பையா, உளவியல் துறையில் இளநிலை, முதுநிலைப் பிரிவுகளில் வகுப்புகள் எடுக்கச் செல்லும் போது, அங்குள்ள மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசுவது, இரட்டை அா்த்தம் கொண்ட சொற்களைப் பயன்படுத்துவது, மாணவிகளை தனது அறைக்கு வரவழைத்து பாலியல் தொல்லையில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக புகாா் எழுந்தது.

பாதிக்கப்பட்ட மாணவிகள் இதுகுறித்து பல்கலைக்கழக நிா்வாகத்திடம் கடந்த வாரம் புகாா் அளித்தனா். ஆனால், பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதற்கிடையில் புகாா் அளித்த மாணவிகளை பேராசிரியா் கருப்பையா புகாரை திரும்பப் பெறுமாறு மிரட்டினாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், சமயநல்லூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழகத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் நேரில் விசாரணை நடத்தினா். இதில் பேராசிரியா் கருப்பையா மீதான புகாா் உறுதி செய்யப்பட்டதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com