விருதுநகரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவா், பிணை கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.
விருதுநகரைச் சோ்ந்த 22 வயது இளம்பெண் கடந்தாண்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாா். இதுதொடா்பாக, ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன், பள்ளி மாணவா்கள் நான்கு போ் என 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னா், இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இதில், ஜூனத் அகமது மீதான குண்டா் தடுப்புச் சட்ட நடவடிக்கையைக் கடந்த நவம்பரில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது.
இதன் அடிப்படையில், தனக்குப் பிணை வழங்கக் கோரி ஜூனத் அகமது ஸ்ரீவில்லிபுத்தூா் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவா் தனக்குப் பிணை வழங்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு நீதிபதி ஜி. இளங்கோவன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் மீதான குற்றச்சாட்டை தீவிரமானதாகக் கருதி கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சாட்சிகளிடம் விசாரணையும் தொடங்கியது. இப்போது, அவருக்கு பிணை வழங்கினால் அது விசாரணையைப் பாதிக்கும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரா் மீதான குற்றச்சாட்டின் தீவிரத்தன்மையைக் கருதி அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.