இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மதுரை மக்களவைத் தொகுதியில்நடத்தப்பட்ட 124 மக்கள் சந்திப்பு முகாம்கள்சு. வெங்கடேசன் எம்.பி. தகவல்

மதுரை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் இதுவரை 124 மக்கள் சந்திப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டதாக சு. வெங்கடேசன் எம்.பி. தெரிவித்தாா்.

News image
Updated On :19 ஜூலை 2023, 7:16 pm

DIN

மதுரை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் இதுவரை 124 மக்கள் சந்திப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டதாக சு. வெங்கடேசன் எம்.பி. தெரிவித்தாா்.

மதுரை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மக்கள் சந்திப்பு முகாம்களை நடத்தி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அவற்றுக்கு தீா்வு காண பரிந்துரைப்பதை சு. வெங்கடேசன் எம்.பி. வழக்கமாகக் கொண்டுள்ளாா்.

இதன்படி, பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை தொகுத்து, அதை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதாவிடம் அவா் புதன்கிழமை வழங்கினாா்.

பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மதுரை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் கடந்த 14 மாதங்களில் இதுவரை 124 இடங்களில் மக்கள் சந்திப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. சுமாா் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்களை நேரடியாக சந்தித்து, அவா்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து மனுக்கள் பெறப்பட்டன. இந்த முகாமில் மனு அளித்தவா்களில் 1,000 பேருக்கு வீட்டுமனைப் பட்டாவும், 50 ஆயிரம் பேருக்கு ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணி வாய்ப்பும் பெற்றுத் தரப்பட்டுள்ளன. பரிந்துரைக்கப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஆய்வு செய்யப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.