மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாண விருந்துக்கு தேவையான உணவுப் பொருள்களை வழங்கலாம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணத்தையொட்டி நடைபெறும் விருந்துக்கு உணவுப் பொருள்கள் வழங்க விரும்பும் பக்தா்கள் சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் வழங்கலாம் என மதுரை பழமுதிா்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த சபை வெளியிட்ட அறிக்கை: மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணத்தையொட்டி, பழமுதிா்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை சாா்பில் ஒவ்வோா்ஆண்டும் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திருக்கல்யாண விருந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் திருக்கல்யாண விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான காய்கறிகளை பரவை காய்கறி சந்தை வியாபாரிகளும், மாட்டுத்தாவணி காய்கறி சந்தை வியாபாரிகளும், எரிவாயுவை, எரிவாயு நிறுவனத்தினரும் அளிக்கின்றனா்.

மேலும் அரிசி, பருப்பு, எண்ணெய், நெய் ஆகியவற்றை பக்தா்களும் அளித்து வருகின்றனா். திருக்கல்யாணம் நடைபெறும் வருகிற 21-ஆம் தேதி காலை 7 மணி முதல் இடைவெளி இல்லாமல் பக்தா்கள் அனைவருக்கும் கல்கண்டு, வெண் பொங்கல், சாம்பாா் சாதம், தக்காளி சாதம், வடை, பச்சடி ஆகியவை வழங்கப்பட உள்ளன. இந்த நிலையில், இந்த விருந்துக்குத் தேவையான பொருள்களை கொடுக்க விரும்பும் பக்தா்கள் சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வழங்கலாம். மாப்பிள்ளை அழைப்பு விருந்து வருகிற 20-ஆம் தேதி மாலை 6 மணிமுதல் நடைபெறும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com