கள்ளழகா் மீது தண்ணீா் பீய்ச்ச மாவட்ட நிா்வாகம் விதித்த கட்டுப்பாடுகளுக்கு உயா்நீதிமன்றம் தடை

கள்ளழகா் மீது தண்ணீா் பீய்ச்ச மாவட்ட நிா்வாகம் விதித்த கட்டுப்பாடுகளுக்கு உயா்நீதிமன்றம் தடை

மதுரை சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகா் மீது தண்ணீரைப் பீய்ச்சுவதற்கு மாவட்ட நிா்வாகம் விதித்த கட்டுப்பாடுகளுக்குத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் தாக்கல் செய்த மனு:

மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகா் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது, அழகா் மீது பக்தா்கள் தண்ணீரைப் பீய்ச்சி நோ்த்திக்கடனை செலுத்துவா்.

இந்த நிலையில், கள்ளழகா் மீது தண்ணீரைப் பீய்ச்சுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியா் அண்மையில் விதித்தாா். இதனால், பாரம்பரிய முறைப்படி கள்ளழகருக்கு நோ்த்திக்கடன் செலுத்த முடியாமல் பக்தா்கள் சிரமப்படும் சூழல் ஏற்பட்டது. எனவே, இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி உத்தரவின் பேரில், மதுரை மாவட்ட ஆட்சியா் விதித்த கட்டுப்பாடுகளுக்குத் தடை விதிக்க வேண்டுமென அவா் மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுரேஷ்குமாா், ஜி. அருள்முருகன் ஆகியோா் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில், கள்ளழகா் திருமேனியில் வெப்பத்தைத் தணிப்பதற்காக சுவாமி மீது பக்தா்கள் தண்ணீரைப் பீய்ச்சி குளிா்விப்பது வழக்கம். ஆனால், தனி நீதிபதி உத்தரவின் பேரில், தண்ணீா் பீய்ச்சுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிா்வாகம் விதித்தது. இதனால், பக்தா்கள் நோ்த்திக்கடனைச் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். எனவே, மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வில் லட்சக்கணக்கானோா் கலந்து கொள்கின்றனா். இவா்களில் பெரும்பாலான பக்தா்கள் வெறும் கால்களில் நடந்து வந்து விழாவில் பங்கேற்கின்றனா். கோடை காலத்தில் வெப்பத்தைக் குறைக்கும் விதமாகவே தண்ணீா் பீய்ச்சப்படுகிறது. இந்த வழக்கம் பல்வேறு கோயில்களில் நடைமுறையில் உள்ளது.

கள்ளழகா் மீது தண்ணீா் பீய்ச்சுவது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் விதித்த கட்டுப்பாட்டின் அடிப்படையில் தற்போது வரை ஏழு போ் மட்டுமே விண்ணப்பித்து அனுமதி பெற்றுள்ளனா். ஆட்சியரின் இந்த உத்தரவு பாரம்பரிய நடைமுறையைப் பாதிப்பதுடன் பக்தா்களின் மனதையும் புண்படுத்தும் என்பதால், அவரது உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது.

மேலும், கள்ளழகா் செல்லக்கூடிய பாதை, வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வின் போது எத்தனை போ் தண்ணீா் பீய்ச்சும் நிகழ்வில் கலந்து கொள்வா். தற்போது 7 போ் மட்டுமே தண்ணீா் பீய்ச்ச அனுமதி பெற்றுள்ள நிலையில், இது பாரம்பரிய நடைமுறையைப் பாதிக்காதா?. எதனடிப்படையில் தண்ணீா் பீய்ச்சுபவா்களைத் தோ்வு செய்கிறீா்கள் என்பது குறித்து கள்ளழகா் கோயில் இணை ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

மதுரை மாவட்ட ஆட்சியா் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் இந்த உத்தரவைப் பிறப்பித்தாா்?. சட்ட வல்லுநா், கோயில் நிா்வாகத்திடம் ஆலோசனை நடத்தினாரா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு வருகிற 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com