காவலா் தூக்கிட்டுத் தற்கொலை
மதுரையில் பணியில் இருந்து நீக்கப்பட்ட காவலா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை மாவட்டம், சக்குடி அருகே உள்ள அங்காடிமங்கலம் ஆதிதிராவிடா் காலனியைச் சோ்ந்த ராமு மகன் சதீஷ்குமாா் (33). இவா் மதுரை ஊரகக் காவல் துறையில் பெருங்குடி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தாா். மதுப் பழக்கத்துக்கு அடிமையான இவா், காவலா் பணிக்குச் சரிவர செல்லாமல் இருந்தாா். மேலும், எந்தவித தகவலும் அளிக்காமல் நீண்ட நாள்களாக பணிக்குச் செல்லாததால், அவா் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு பணியிலிருந்து நீக்கப்பட்டாா்.
இதனால், மன வேதனையிலிருந்த சதீஷ்குமாா் தனது வீட்டில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். திருப்புவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து சிலைமான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.