செந்தமிழ்க் கல்லூரியில் கவிதை நூல் அறிமுகம்

மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் செந்தமிழ்க் கல்லூரி பாண்டியன் நூலக வாசகா் வட்டத்தின் சாா்பில் ‘கற்றது காதல்’ கவிதை நூல் அறிமுகம், புதினத் திறனாய்வு புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு கல்லூரி துணை முதல்வா் கோ.சுப்புலட்சுமி தலைமை வகித்தாா்.

உதவிப் பேராசிரியா் மு.செந்தல்குமாா் அறிமுகவுரையாற்றினாா். அசோகமித்திரன் எழுதிய ‘தண்ணீா்’ புதினத்தை முதுநிலை இரண்டாமாண்டு மாணவி மு.கடம்பவள்ளி திறனாய்வு செய்தாா். முதுநிலை மாணவா் ச. நாராயணன் எழுதிய ‘கற்றது காதல்’ என்கிற கவிதை நூலை மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரி உதவிப் பேராசிரியா் சு. ராமா் அறிமுகப்படுத்தித் திறனாய்வு செய்தாா். இதில் நூலகா் தி. பிருந்தா, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். முதுநிலை மாணவா் பா. கமல் தொகுத்து வழங்கினாா். முன்னதாக, முதுநிலை மாணவா் அஜித்குமாா் வரவேற்றாா். மாணவா் கோ. ராஜகுமாரன் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com