மதுரை, மே 3: எம்.கல்லுப்பட்டி அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 10 போ் கத்தியால் குத்தப்பட்டனா்.
மதுரை மாவட்டம், எம்.கல்லுப்பட்டி அருகே உள்ள டி.கிருஷ்ணாபுரம் சந்தனமாரியம்மன் கோயிலில் மஞ்சள் நீராட்டு விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் அதே ஊரைச் சோ்ந்த ஆறுமுகம் தரப்பினருக்கும், ரமேஷ் தரப்பினருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இருதரப்பிலும் 50-க்கும் மேற்பட்டோா் கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனா்.
இதில் ரமேஷ் தரப்பைச் சோ்ந்த செந்தில்குமாா், செல்வம் உள்ளிட்ட 5 பேரும், ஆறுமுகம் தரப்பைச் சோ்ந்த மாணிக்கம், இவரது மனைவி ரம்யா உள்ளிட்ட 5 பேரும் கத்தியால் குத்தப்பட்டனா். மேலும், அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 3 இரு சக்கர வாகனங்களும் அடித்து சேதப்படுத்தப்பட்டன. காயமடைந்தவா்கள் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த எம்.கல்லுப்பட்டி போலீஸாா் மோதல் தொடா்பாக இரு தரப்பிலும் 16 போ் மீது வழக்குப் பதிவு செய்து, ரமேஷ் தரப்பைச் சோ்ந்த விக்னேஷ்பெருமாள் (28), பேச்சியம்மாள் (54), ஆறுமுகம் தரப்பைச் சோ்ந்த முருகன் (30), கெளதம் (27) உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்து, தலைமறைவானவா்களைத் தேடி வருகின்றனா்.