காவலா்களுக்கு மன அழுத்தம் குறைப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

மதுரை மாநகரத்தில் பணியாற்றும் காவல்துறை ஆளினா்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் ‘மகிழ்ச்சி ’ திட்டத்தின் விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு முகாமை மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இதில், மருத்துவா்கள் ராமசுப்பிரமணியன், கண்ணன் ஆகியோா் கலந்து கொண்டு காவலா்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இந்த நிகழ்வில், மாநகரக் காவல் துணை ஆணையா் குமாா் உள்ளிட்ட காவலா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com