வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ராமநாதபுரத்தில் பாஜக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

ராமநாதபுரம் அருகே பாஜக பிரமுகரை   வியாழக்கிழமை ஆட்டோவில் கடத்திச் சென்று 5 பேர் கொண்ட கும்பல் பயரங்கர ஆயுதங்களால்

Updated On :29 மார்ச் 2018, 8:09 pm

ராமநாதபுரம் அருகே பாஜக பிரமுகரை   வியாழக்கிழமை ஆட்டோவில் கடத்திச் சென்று 5 பேர் கொண்ட கும்பல் பயரங்கர ஆயுதங்களால் தாக்கியதில் அவர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
  ராமநாதபுரம் எஸ்.எம். அக்ரஹாரம் சுப்பையா சேர்வை சந்து பகுதியில் வசித்து வருபவர் ராமன் மகன் வீரபாகு (48).  ஆட்டோ ஓட்டுநரான இவர் பா.ஜ.க. மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். 
   இந்நிலையில், வியாழக்கிழமை ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் இருவர் பேராவூரில் உள்ள ஒருவரை அழைத்து வர ஆட்டோ தேவைப்படுகிறது என்று வீரபாகுவை அழைத்துச் சென்றுள்ளனர். பேராவூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அருகில் இருளில் ஆட்டோவை நிறுத்துமாறு கூறியுள்ளனர். ஆட்டோவை வீரபாகு நிறுத்தியதும் அங்கு வந்த மேலும் 3 பேர் சேர்ந்து அரிவாள், கத்தி, கம்பு போன்றவற்றால் வீரபாகுவை தாக்கியுள்ளனர்.  5 பேரும் அவரை தாக்கிக் கொண்டிருந்தபோதே வீரபாகு அவ்வழியாக வந்த நகரப் பேருந்தில் ஏறி தப்பி அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்துள்ளார்.   தலை,  கை, கால்களில் பலத்த காயமடைந்து ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வீரபாகு  பின்னர் தீவிர சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டார். 
 ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் டி.எஸ்.பி. எஸ். நடராஜ்,  ஆய்வாளர்கள் செந்தில்குமார், சிவசக்தி ஆகியோர் வீரபாகுவிடம் நேரில் விசாரணை நடத்தினர்.
 சம்பவம் தொடர்பாக வீரபாகுவின் மனைவி சுமதி கொடுத்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 
      வீரபாகு தாக்கப்பட்ட தகவல் அறிந்ததும் பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் துரை. கண்ணன், மாவட்ட செயலாளர் குமார்,  ஆத்ம கார்த்திக், இளைஞணி நிர்வாகி மணிமாறன் உள்பட ஏராளமான பா.ஜ.க.வினர்  அரசு மருத்துவமனையில் குவிந்தனர்.மேலும் தாக்கியவர்களை உடனடியாக கைது செய்யுமாறு போலீஸாரிடம் வலியுறுத்தினர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.