தொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

முடிதிருத்தும் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தைக் கண்டித்து ராமேசுவரத்தில் திங்கள்கிழமை முடி திருத்தும் தொழிலாளர்கள் சலூன்களை அடைத்து உண்ணாவிரமிருந்தனர்.

Updated On :14 மே 2018, 6:59 pm

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தைக் கண்டித்து ராமேசுவரத்தில் திங்கள்கிழமை முடி திருத்தும் தொழிலாளர்கள் சலூன்களை அடைத்து உண்ணாவிரமிருந்தனர்.
கடலூரில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிதிருத்தும் தொழிலையும், தொழிலாளர்களையும் இழிவுபடுத்தும் விதமாக அமைச்சர் பேசியதாகக் கூறி இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையொட்டி ராமேசுவரம், மண்டபம் ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகள் மற்றும் ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் 500- க்கும் மேற்பட்ட முடி திருத்தும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அனைத்து மருத்துவர் சமூதாய கூட்டமைப்பு சார்பில் ராமேசுவரம் பேருந்து நிலையம் முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதில் அந்த அமைப்பின் மாவட்டத் தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். மண்டபம் ஒன்றியத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இதில் 300-க்கும் மேற்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். சங்க நிர்வாகி எஸ்.எஸ்.கணேசன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.