தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தைக் கண்டித்து ராமேசுவரத்தில் திங்கள்கிழமை முடி திருத்தும் தொழிலாளர்கள் சலூன்களை அடைத்து உண்ணாவிரமிருந்தனர்.
கடலூரில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிதிருத்தும் தொழிலையும், தொழிலாளர்களையும் இழிவுபடுத்தும் விதமாக அமைச்சர் பேசியதாகக் கூறி இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையொட்டி ராமேசுவரம், மண்டபம் ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகள் மற்றும் ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் 500- க்கும் மேற்பட்ட முடி திருத்தும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அனைத்து மருத்துவர் சமூதாய கூட்டமைப்பு சார்பில் ராமேசுவரம் பேருந்து நிலையம் முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதில் அந்த அமைப்பின் மாவட்டத் தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். மண்டபம் ஒன்றியத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இதில் 300-க்கும் மேற்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். சங்க நிர்வாகி எஸ்.எஸ்.கணேசன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

மாநிலங்களவையில் நிதின் நவீன் உள்பட புதிய எம்பிக்கள் பதவியேற்பு!

நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் தங்களுக்கு நடந்தது என்ன? கண்ணீருடன் பெண்கள்!

முத்துராமலிங்கம் படத்தில் நடித்ததற்கு வருத்தப்படுகிறேன்: கௌதம் ராம் கார்த்திக்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

