மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பாம்பன் ரயில் பாலத்தில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் ஆய்வு

பாம்பன் ரயில் பாலத்தில், ரயில்வே பாதுகாப்புப் படை வெடிகுண்டு தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

Updated On :21 மே 2018, 6:21 pm

பாம்பன் ரயில் பாலத்தில், ரயில்வே பாதுகாப்புப் படை வெடிகுண்டு தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் இடையிலான பாம்பன் ரயில் பாலம் தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தின் கண்காணிப்பில் இருந்து வருகிறது.
ஆண்டுதோறும், இந்தப் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு வெடிகுண்டு கண்டறியும் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து, பாதுகாப்பை உறுதி செய்வது வழக்கம். அதனடிப்படையில், திங்கள்கிழமை ரயில்வே பாதுகாப்புப் படை வெடிகுண்டு தடுப்புப் பிரிவு ராதாகிருஷ்ணன், டேனியல் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள், பாம்பன் ரயில் நிலையத்தில் இருந்து மண்டபம் பூங்கா வரையில் உள்ள தண்டவாளம் மற்றும் பாலத்தை ஆய்வு செய்தனர்.
இதில், வெடிகுண்டு கண்டறியும் சிறப்புப் பயிற்சி பெற்ற மோப்ப நாய் மாயா மற்றும் வெடிகுண்டு கண்டறியும் தொழில்நுட்பக் கருவிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.