கமுதி அருகே வ.மூலைக்கரைப்பட்டியில் அமைந்துள்ள சுந்தரராஜ பெருமாள், குங்கும காளியம்மன், கருப்பணசாமி கோயில் 48 ஆம் நாள் மண்டல பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை காலை மஹா மண்டல பூஜை, பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்தல், அக்கினிச் சட்டி, பூப்பெட்டி, வேல் குத்துதல், சேத்தாண்டி வேடம், பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில், சுந்தரராஜ பெருமாள், குங்கும காளியம்மன், கருப்பணசாமி மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு மலர் அலங்காரம், சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
விழா ஏற்பாடுகளை, வ.மூலைக்கரைப்பட்டி இளைஞரணி மற்றும் கிராமப் பொதுமக்கள் செய்திருந்தனர்.