திருவாடானை அருகே சனிக்கிழமை மாலை, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டரிலிருந்து குதித்த இளைஞர் உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம், உறுதிகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (28). இவர், திருவாடானை அருகே உள்ள உப்பூர் அனல் மின் நிலையத்துக்கு டிராக்டர் மூலம் தண்ணீர் விற்பனை செய்து வந்தார். இந்நிலையில், சனிக்கிழமை மாலை வழக்கம்போல் தண்ணீர் கொண்டு சென்று இறக்கிவிட்டு, உப்பூர் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறியது. அதையடுத்து, ஓட்டுநர் சங்கர் உயிர் தப்பிப்பதற்காக கீழே குதித்தார். இருப்பினும் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த திருப்பாலைக்குடி போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு பிரச்னை... அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக! - கம்யூனிஸ்ட் வேண்டுகோள்
இந்தியாவின் மின்னல் வேக மனிதர்! தேசிய சாதனையை முறியடித்த குரிந்தர்வீர் சிங்!

வீர வசனங்கள் பேசிய முதல்வர் விஜய் வாய்திறக்க மறுப்பது ஏன்? - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

காத்திருந்து சிறுவனை கொலை செய்தது ஏன்? - விளக்குத்தூண் காவல்துறை விசாரணை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


