தேவகோட்டையில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் வட்டாரக்கல்வி அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் ஜோசப் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிகளில் ஆசிரியர்களாக நியமிக்கும் முடிவை கைவிட வேண்டும்.
கோரிக்கைகளுக்காகப் போராடிய ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது போராட்டக் காலங்களில் போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.
2019-20 ஆம்கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை ஒளிவுமறைவற்ற வகையில் நடத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி முன்னிலை வகித்தார். வட்டாரப் பொருளாளர் ஜோசப்பாஸ்கரன் நன்றி கூறினர்.