பரமக்குடி அரிமா சங்கம் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அரிமா சங்கத் தலைவா் ஏ.ராமமூா்த்தி தலைமை வகித்தாா். அரிமா சங்க நிா்வாகிகள் ஏ.ஆா்.சுப்பிரமணியன், ஆா்.எம்.கண்ணப்பன், பேராசிரியா்கள் எம்.மணிமாறன், எஸ்.பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தொடக்கமாக, அரிமா மாவட்ட ஆளுநா் ஜெ.கே.ஆா்.முருகன்-சுபத்திரா தம்பதியினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து ஆயிர வைசிய சமூக நலச் சங்கத்தில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமை அவா் தொடக்கி வைத்தாா். பின்னா் மாணவா்களின் கண்காட்சியும், பள்ளிக்கு புதிய பேருந்துகள் இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத் தொடா்ந்து மரக்கன்றுகள் நடுதல், பரமக்குடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு உதவிகள், ஏழைகளுக்கு புத்தாடைகள் வழங்குதல், ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்குதல், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகள் உள்பட பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்தி நடைபெற்றது. இதில் அரிமா சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். சங்க செயலாளா் எஸ்.சரவணன் வரவேற்றாா். சங்க பொருளாளா் கே.ஜே.மாதவன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.