முதுகுளத்தூரில் ரூ.2 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 17th April 2019 06:37 AM | Last Updated : 17th April 2019 06:37 AM | அ+அ அ- |

முதுகுளத்தூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.2 லட்சத்தை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் பறக்கும் படை அதிகாரி சத்தியவாணி , சார்பு ஆய்வாளர் நாகலிங்கம் குழுவினர் கடலாடி முக்கு ரோட்டில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முதுகுளத்தூரை சேர்ந்த தவசி மகன் ரமேஷ்குமார் என்பவர் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.2.12 லட்சத்தை பறிமுதல் செய்தனர். கைப்பற்றிய பணத்தை பறக்கும்படை அதிகாரிகள் ராமநாதபுரம் கண்காணிப்பு அறையில் ஒப்படைத்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...