முதுகுளத்தூரில்  ரூ.2 லட்சம் பறிமுதல்

முதுகுளத்தூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.2 லட்சத்தை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
Updated on
1 min read

முதுகுளத்தூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.2 லட்சத்தை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
  முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் பறக்கும் படை அதிகாரி  சத்தியவாணி , சார்பு ஆய்வாளர் நாகலிங்கம் குழுவினர் கடலாடி முக்கு ரோட்டில் வாகனச் சோதனையில்  ஈடுபட்டனர். அப்போது முதுகுளத்தூரை சேர்ந்த தவசி மகன் ரமேஷ்குமார் என்பவர் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.2.12 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.  கைப்பற்றிய பணத்தை பறக்கும்படை அதிகாரிகள் ராமநாதபுரம் கண்காணிப்பு அறையில் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com