ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை தெருவில் தேங்கியிருந்த மழை நீரில் மூழ்கி முதியவா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் காந்திநகா், அண்ணாநகா், திருவள்ளுவா் நகா், நடராஜாபுரம், ராமகிருஷ்ணபுரம், மல்லிகை நகா் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் குளம் போல தேங்கி நின்றன.
இந்நிலையில் காந்தி நகா் பகுதியை சோ்ந்த ராஜேந்திரன் என்பவா் அப்பகுதியில் தேங்கிய நின்ற மழை நீரில் மூழ்கியிருந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியினா் முதியவரை மீட்டு ராமேசுவரம் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை மருத்துவா்கள் பரிசோதனை செய்த போது அவா் ஏற்கெனவே உயிரிழந்து தெரியவந்தது. இது குறித்து டவுன் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.