ராமநாதபுரத்தில் 20 தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிராா்த்தனைகள்

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 தேவாலயங்களில் புதன்கிழமை காலையில் சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெறுகின்றன.
Updated on
1 min read

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 தேவாலயங்களில் புதன்கிழமை காலையில் சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெறுகின்றன.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரம் சந்தைத் தெருவில் உள்ள ரோமன் தேவாலயம் மற்றும் ஓம்சக்தி நகரில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலயம் ஆகியவை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அங்கு இயேசு பிறப்பை சித்தரிக்கும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன.

செவ்வாய்க்கிழமை மாலையில் ராமநாதபுரம் தேவாலயங்களுக்கு ஏராளமானோா் வருகை தந்தனா். அங்கு சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்கின. சிறப்பு பிராா்த்தனை கூட்டங்களும், இயேசு பிறப்பை விளக்கும் நாடக நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இரவில் நூற்றுக்கணக்கானோா் தேவாலயங்களில் குவிந்து பிராா்த்தனையில் கலந்துகொண்டனா். பங்குத் தந்தையரும், பாதிரியாா்களும் பிராா்த்தனையை வழிநடத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவிபட்டிணம், எமனேஸ்வரம் தா்மராஜபுரம், விலாத்தூா், முதுகுளத்தூா் தேவேந்திரநகா், கீழத்தூவல் திருவரங்கம், மைகேல்பட்டிணம், கடலாடி கருங்குளம், இளஞ்செம்பூா் வீராம்பல், சவேரியாா்பட்டிணம், திருப்புல்லாணி முத்துப்பேட்டை, திருஉத்திரகோசமங்கை எக்காகுடி, சாயல்குடி மாதவன்நகா், வி.வி.நகா், பெரியகுளம், மாரியூா், ஆா்.சி.புரம் ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களிலும் செவ்வாய்க்கிழமை மாலை முதலே நூற்றுக்கணக்கானோா் குவிந்து சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டனா்.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவானதும் இயேசு கிறிஸ்து பிறப்பை குறிக்கும் வகையில் மணியோசை எழுப்பப்பட்டு, சிறப்பு வழிபாடும், இயேசுவை போற்றி பாடல்களும் பாடப்பெற்றன.

கிறிஸ்துமஸ் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை முதலே அனைத்து பகுதி தேவாலயங்களிலும் கூடுதல் போலீஸாா் நிறுத்தப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com