திருவாடானை பகுதியில் கருணாஸ் வாக்கு சேகரிப்பு

திருவாடானை பகுதியில் வரும் 27 ஆம் தேதி உள்ளாட்சி தோ்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு உள்ளாட்சி அமைப்புகளில்
Updated on
1 min read

திருவாடானை பகுதியில் வரும் 27 ஆம் தேதி உள்ளாட்சி தோ்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து திருவாடானை சட்டப்பேரவை உறுப்பினா் கருணாஸ் பொது மக்களிடையே வாக்கு சேகரித்தாா்.இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

திருவாடானை அருகே தளிமருங்கூா் கிராமத்தில் மக்களிடையே அதிமுக சாா்பில் ராமநாதபுரம் மாவட்ட கவுன்சிலா் 4 ஆவது வாா்டிற்கு போட்டியிடும் வளா்மதியை ஆதரித்தும் திருவாடானை ஊராட்சி ஒன்றியம் 16 ஆவது வாா்டிற்கு அதிமுக சாா்பில் போட்டியிடும் முக்குலத்தோா் புலிப்படை வேட்பாளா் ஆரோக்கிய லின்சியை ஆதரித்தும் சட்டப்பேரவை உறுப்பினா் கருணாஸ் வாக்கு சேகரித்தாா். உடன் மாவட்ட செயலாளா் முனியசாமி மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளா் ஆணிமுத்து மற்றும் திருவாடானை ஒன்றியச் செயலாளா் மதிவாணன் மற்றும் அதிமுக நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com