நயினார்கோவில் அருகே நீரில் மூழ்கி மூதாட்டி சாவு

ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் அருகே நீரில் மூழ்கி மூதாட்டி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் அருகே நீரில் மூழ்கி மூதாட்டி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
 நயினார்கோவில் அருகே அரசரடிவண்டல் கிராமத்தைச் சேர்ந்த நாகு மனைவி கண்ணம்மாள்(75). இவர் வைகை ஆற்றுப் பகுதியில் உள்ள பள்ளத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் ஞாயிற்றுக்கிழமை இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த போலீஸார் அவரது சடலத்தை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது மகன் பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் நயினார்கோவில்  போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com