பரமக்குடி அருகே பேருந்து மோதி முதியவர் பலி

பரமக்குடி அருகே புதன்கிழமை சாலையோரம் நடந்து சென்ற முதியவர் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
Updated on
1 min read

பரமக்குடி அருகே புதன்கிழமை சாலையோரம் நடந்து சென்ற முதியவர் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
 பரமக்குடிஅருகே உள்ள வி.பி.காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் (75). இவர் முதுகுளத்தூர் செல்லும் சாலையில் மேலாய்க்குடியில் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க நடந்து சென்றுள்ளார். அப்போது பரமக்குடியிலிருந்து சென்ற அரசுப் பேருந்து அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
இதுகுறித்து எமனேசுவரம் போலீஸார் வழக்குப் பதிந்து தோளூரைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் ராஜேந்திரன் என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com