மலட்டாறு பள்ளியில் தீ விபத்து விழிப்புணர்வு முகாம்

கடலாடிஅருகே மலட்டாறு வி.வி.எஸ்.எம் மெட்ரிக் பள்ளியில் தீ விபத்து குறித்த விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

கடலாடிஅருகே மலட்டாறு வி.வி.எஸ்.எம் மெட்ரிக் பள்ளியில் தீ விபத்து குறித்த விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சாயல்குடி தீயணைப்புத் துறை சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது குறித்து பாதுகாப்பு ஒத்திகை செய்து காட்டப்பட்டது. 
முகாமுக்கு பள்ளியின் நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான வி.சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். தாளாளர் சந்திரா சத்தியமூர்த்தி, பள்ளியின் முதல்வர் அங்காளஈஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
தீ விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பது குறித்து சார்பு ஆய்வாளர் முனியசாமி விளக்கவுரை ஆற்றினார். இதில் மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com