முதுகுளத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று மயங்கிவிழுந்து காயமடைந்த விவசாயி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இறந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே செம்பொன்குடி தெற்குத்தெருவைச் சேர்ந்த பாண்டியன்(27). விவசாயியான இவர், வெள்ளிக்கிழமை தனது ஊரில் இருந்து இருசக்கர வாகனத்தில் திருவரங்கம் சென்ற போது மயக்கமடைந்து கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்தவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டியன் சனிக்கிழமை இறந்தார்.
இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். விபத்து குறித்து அவரது மனைவி காளீஸ்வரி அளித்தப் புகாரின் பேரில் கீழத்தூவல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.