ராமநாதபுரத்தில் சனிக்கிழமை அதிகாலை சரக்கு லாரியும், வேனும் மோதிய விபத்தில் 6 பேர் காயமடைந்தனர்.
ராமநாதபுரம் நகர் சிவஞானபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (38). சரக்கு லாரி ஓட்டுநர். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த மேலும் 4 பேரும் தேவிபட்டிணம் பகுதியில் வைக்கோல் ஏற்றுவதற்காக சனிக்கிழமை அதிகாலை புறப்பட்டனர். அவர்கள் ராமநாதபுரம் நகர் கேணிக்கரை சாலை சந்திப்பில் சென்றபோது, ஓம்சக்தி நகரிலிருந்து அரண்மனை நோக்கி வேன் ஒன்று வந்துள்ளது. லாரியும், வேனும் எதிர்பாராத விதமாக மோதியதில் லாரி கவிழ்ந்தது. இதில் லாரி ஓட்டுநர் சரவணன் (38), அவருடன் சென்ற சேகர் (34), மற்றொரு சரவணன் (39), ராஜூ (56), முருகன் (40) மற்றும் வேன் ஓட்டுநர் மகாலிங்கம் (48) ஆகியோர் காயமடைந்தனர்.
விபத்தில் காயமடைந்த அனைவரும் ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து கேணிக்கரை
காவல் நிலைய சார்பு ஆய்வாளர் எஸ்.ஆனந்தன் வழக்குப்பதிந்து விசாரித்துவருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.