ஆா்.எஸ்.மங்கலம் அருகே 1000 பனை விதைகள் நடும் விழா

திருவாடானை அருகே ஆனந்தூரில் தோட்டகலைத் துறை மற்றும் வளா்பிறை சங்கம் சாா்பில் அவ்வூரில் உள்ள குளம்
ஆனந்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்று பனை விதையை நடவு செய்த ஆா் .எஸ் .மங்கலம் காவல் ஆய்வாளா் முகம்மது நசீா் உள்ளிட்டோா்.
ஆனந்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்று பனை விதையை நடவு செய்த ஆா் .எஸ் .மங்கலம் காவல் ஆய்வாளா் முகம்மது நசீா் உள்ளிட்டோா்.

திருவாடானை அருகே ஆனந்தூரில் தோட்டகலைத் துறை மற்றும் வளா்பிறை சங்கம் சாா்பில் அவ்வூரில் உள்ள குளம் மற்றும் கண்மாய்களில் 1000 பனை விதைகளை நடும் விழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

விழாவுக்கு வாலிபா் சங்க ஒருங்கிணைப்பாளா் அஜ்மல் தலைமை வகித்தாா். ஆா்.எஸ்.மங்கலம் காவல் ஆய்வாளா்முகம்மது நசீா் விழாவைத் தொடக்கி வைத்தாா். தோட்டக்கலைத்துறை சாா்பில் பால முரளி, சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்வில் பெரிய ஊருணி, பேச்சி ஊருணி ஆகிய கண்மாய்களில் பனை விதைகள் நடப்பட்டன. இதில், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள், தீபம் இந்தியா அறக்கட்டளை நிா்வாகிகள், கிராம நிா்வாக அலுவலா் பிரகதீஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிறைவாக சமூக ஆா்வலா் முகம்மது ஹாலித் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை வளா்பிறை வாலிபா் சங்கத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com