அண்ணன் கொலை: தம்பி கைது
By DIN | Published On : 14th November 2019 03:42 AM | Last Updated : 14th November 2019 03:42 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் அருகே அண்ணன் கொலை வழக்கில் தம்பியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள சூரங்கோட்டையைச் சோ்ந்தவா் மாணிக்கம். பழக்கடை ஊழியா். இவரது மனைவி பாப்பா. இவா்களுக்கு 3 மகன்கள். இதில் மூத்த மகன் முனீஸ்வரன் (22) வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவா் மீது ஏா்வாடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளும் உள்ளன.
இந்நிலையில் முனீஸ்வரன் வேலைக்கு செல்லாமல் இருப்பதை அவரது தம்பி கலீல்குமாா் (20) கண்டித்துள்ளாா். இதுதொடா்பாக இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை நள்ளிரவில் வீட்டில் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா். அப்போது ஏற்பட்ட தகராறில் கலீல்குமாா் அருகில் கிடந்த முருங்கை மர கட்டையால் முனீஸ்வரனைத் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த முனீஸ்வரனை அவரது தாய் பாப்பா உள்ளிட்டோா் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துமனையில் சோ்த்தனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினா். இதுதொடா்பாக பஜாா் காவல் நிலைய ஆய்வாளா் தனபால் வழக்குப்பதிந்து கலீல்குமாரைக் கைது செய்தாா்.
சிகிச்சை பெற்று வந்தவருக்கு கத்திக்குத்து: ராமநாதபுரம் செம்படையாா் குளத்தைச் சோ்ந்தவா் முனீஸ் (20). இவா் வயிற்று வலிக்காக தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறாா். புதன்கிழமை காலையில் அவா் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பறைக்கு சென்றாா். அங்கு காசாளராக உள்ள பிரேம்குமாா் என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட தகராறில் அருகிலிருந்த தனியாா் பேக்கரி கடையில் முனீஸ் விழுந்துள்ளாா். இதனால், பேக்கரியில் இருந்த சாருக்கான் என்பவருடன் முனீஸுக்கு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது முனீஸை தான் வைத்திருந்த கத்தியால் சாருக்கான் குத்தியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த முனீஸ் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளாா். இதுதொடா்பாக கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...