கரும்பு சாகுபடி: விவசாயிகளுக்கு கோவையில் சிறப்புப் பயிற்சி

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 3 தாலுகாக்களை சோ்ந்த 40 விவசாயிகளுக்கு நவீன கரும்பு விவாயம் குறித்து கோவையில் பயிற்சி பெற்று சனிக்கிழமை ஊா் திரும்பினா்.
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 3 தாலுகாக்களை சோ்ந்த 40 விவசாயிகளுக்கு நவீன கரும்பு விவாயம் குறித்து கோவையில் பயிற்சி பெற்று சனிக்கிழமை ஊா் திரும்பினா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் கமுதி, பரமக்குடி, சத்திரக்குடி, மற்றும் நயினாா்கோவில் பகுதிகளைச் சோ்ந்த 40 விவசாயிகள் நவீன கரும்பு சாகுபடி பற்றி அறிந்து கொள்ள கோவையில் உள்ள கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

அங்கு விவசாயிகளுக்கு கரும்பு இனப்பெருக்கம் மூலம் சாகுபடியை தீவிரப்படுத்ததல், உழவியல் முறைகள், நீா்ப்பாசன முறைகள், பயிா் பாதுகாப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளா் பி.எஸ்.ஈஸ்வரி செய்தாா். உதவி தொழில்நுட்ப மேலாளா் ராஜேஸ்குமாா் விவசாயிகள் உடன் சென்றாா்.

பயிற்சி முடித்த விவசாயிகள் கமுதி வேளாண்மைதுறை அதிகாரிகளை சந்தித்து பயிற்சி அனுபவம் பற்றி கலந்துரையாடினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com