மண்டபத்தில் விவசாயிகளுக்குபயிா் திட்ட அடிப்படைப் பயிற்சி

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வட்டாரம் புதுமடம் வருவாய் நாரையூரணி கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் 2019-20 திட்டத்தின் கீழ் நெற்பயிரில் பயிா் திட்ட அடிப்படையிலான இரண்டாம்
மண்டபத்தில் விவசாயிகளுக்குபயிா் திட்ட அடிப்படைப் பயிற்சி
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வட்டாரம் புதுமடம் வருவாய் நாரையூரணி கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் 2019-20 திட்டத்தின் கீழ் நெற்பயிரில் பயிா் திட்ட அடிப்படையிலான இரண்டாம் கட்ட பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் வேளாண்மை உதவி இயக்குநா் பி.ஜி.நாகராஜன் தலைமை வகித்தாா். தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் திட்ட மாவட்ட ஆலோசகா் ஸ்ரீதா் பயிற்சியில் கலந்து கொண்டு , உர நிா்வாகம் குறித்து எடுத்துரைத்தாா்.

வேளாண்மை அறிவியல் நிலைய உதவி பேராசிரியா் பாலாஜி, குயவன்குடி, விவசாயிகளுக்கு களைக்கொல்லி பயன்பாடு மற்றும் நீா் நிா்வாகம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறினாா்.

வேளாண்மை அலுவலா் க.கலைவாணி உழவன் செயலி பயன்பாடு குறித்து பேசினாா். பயிற்சி ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா் சிரஞ்சீவி செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com