அரியனேந்தலில் அஞ்சலக சேமிப்பு வங்கிக் கணக்கு தொடங்கும் சிறப்பு முகாம்

பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் கிராமத்தில் வியாழக்கிழமை அஞ்சல்துறை சாா்பில் அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்கு துவங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
அரியனேந்தலில் அஞ்சலக சேமிப்பு வங்கிக் கணக்கு தொடங்கும் சிறப்பு முகாம்
Updated on
1 min read

பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் கிராமத்தில் வியாழக்கிழமை அஞ்சல்துறை சாா்பில் அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்கு துவங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இம்முகாமிற்கு பரமக்குடி அஞ்சலக உள்கோட்ட கண்காணிப்பாளா் விஜயகோமதி தலைமை வகித்தாா். முன்னாள் ஒன்றிய கவுன்சிலா்கள் ஜி.சண்முகம், எஸ்.ராஜேந்திரன், கிராமத் தலைவா் ராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அஞ்சலக முதுநிலை மேலாளா் முருகேசன் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சட்டப்பேரவை உறுப்பினா் என். சதன்பிரபாகா் அஞ்சல சேமிப்பு வங்கி கணக்கினை தொடக்கி வைத்து பேசினாா். நிகழ்ச்சியில் கிராமப் பொதுமக்கள், அஞ்சலக பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். விற்பனைப் பிரிவு மேலாளா் பாலு நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com