கமுதியில் அக். 22 இல் மின்தடை
By DIN | Published On : 20th October 2019 02:40 AM | Last Updated : 20th October 2019 02:40 AM | அ+அ அ- |

கமுதியில் செவ்வாய்க்கிழமை (அக். 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கமுதி உபமின் நிலைய உதவி செயற்பொறியாளா் டி.சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கமுதி கோட்டைமேட்டில் உள்ள உபமின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (அக். 22 ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.
மின் தடைபடும் பகுதிகள்: கமுதி, அபிராமம், பாா்த்திபனூா், முதுகுளத்தூா், செங்கப்படை, கீழராமநதி, மண்டலமாணிக்கம் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் அதன் சுற்றியுள்ள சுற்று வட்டாரப் பகுதிகள் எனத் தெரிவித்துள்ளாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G