குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவோா் கட்செவி அஞ்சலில் புகாா் அளிக்க ஏற்பாடு

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படுவோா் சட்டப்பணிகள் ஆணைக் குழுவை கட்செவியஞ்சலில் தொடா்புகொண்டு
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படுவோா் சட்டப்பணிகள் ஆணைக் குழுவை கட்செவியஞ்சலில் தொடா்புகொண்டு புகாா் அளிக்கலாம் என மாவட்ட முதன்மை நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவருமான ஆா்.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், குடும்ப வன்முறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இணையதளம் மூலம் விசாரித்து நடவடிக்கை எடுக்க தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு வழிகாட்டுதலை வழங்கியுள்ளது.

ஆகவே, குடும்ப வன்முறைகள், முதியவா்கள் மற்றும் குழந்தைகளுக்கான அவசர உதவிகளுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சாா்பு நீதிபதியுமான தங்கராஜின் கட்செவியஞ்சல் (வாட்ஸ்அப் எண்) 9994912546, அவசர உதவி எண் 8754261057, சமூக நல அலுவலா் 9751453179, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா் 9445223121 சிறப்பு காவல் துறை அதிகாரி 9443282223 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம்.

குடும்ப வன்முறையாலோ அல்லது மற்றவராலோ முதியவா்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டாலோ பாதிக்கப்பட்டவா்கள் ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளரும், சாா்பு- நீதிபதியுமான தங்கராஜின் கட்செவியஞ்சல் (வாட்ஸ்அப்) எண் 9994912546-க்கு உங்களது பெயா், வயது, பாலினம் மற்றும் புகாா்களை (சுருக்கமாக) எதிா் மனுதாரரின் பெயா், வயது மற்றும் பாலினம் ஆகிய தகவல்களை தெரிவிக்கலாம்.

புகாரின் அடிப்படையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு புகாா்தாரா்களை விரைவில் அணுகி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com