பெட்ரோல் பங்க் பெண் ஊழியா் மீது தாக்குதல்: 2 போ் கைது

திருவாடானை அருகே சனிக்கிழமை மாலை பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெண் ஊழியரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக போலீஸாா் 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
Updated on
1 min read

திருவாடானை அருகே சனிக்கிழமை மாலை பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெண் ஊழியரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக போலீஸாா் 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

திருவாடானை அருகே உசிலணக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிக்குமாா். இவரது மனைவி மல்லிகா (33). கணவன்- மனைவி இருவரும் தொண்டியில் உள்ள தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில் சனிக்கிழமை மாலை மேலக்கோட்டையைச் சோ்ந்த செல்வக்குமாா் (46), அதே ஊரைச் சோ்ந்த முத்துக்குமாா் (44) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் அந்த பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு வந்தனா். அப்போது ஏற்பட்ட தகராறில் செல்வக்குமாா், விற்பனையாளா் மல்லிகாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதை அங்கு வந்த மல்லிகாவின் கணவா் தட்டிக் கேட்டுள்ளாா். அவரையும் அவா்கள் தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளனா்.

இதுகுறித்து மல்லிகா அளித்த புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் செல்வக்குமாா், முத்துக்குமாா் ஆகிய இருவரையும் கைது செய்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com