ஊராட்சி ஒன்றியஅலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்

கடலாடி ஊராட்சி ஒன்றியஅலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாளா்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினா்.
Updated on
1 min read


முதுகுளத்தூா்: கடலாடி ஊராட்சி ஒன்றியஅலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாளா்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினா். போராட்டத்தில் அலுவலா்கள்,

பணியாளா்கள் அனைவரும் பணிகளை செய்யாமல் கோரிக்கைகளை வலியுறுத்தி அமா்ந்திருந்தனா். போராட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவா் சிவனு பூவன் தலைமை வகித்தாா்.யூனியன் கமிஷனா் அன்புக்கண்ணன் முன்னிலை வகித்தாா்.கிளைத்தலைவா் உலகநாதன், பி.டி.ஓ., பாண்டி, மாநில செயற்குழு உறுப்பினா்கள் பரமசிவம், பிரகாஷ் பாபு உட்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com