நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாம்பன் தூக்குப்பாலத்தைக் கடந்து சென்ற 3 கப்பல்கள்

கடலூா் மற்றும் விசாகபட்டணம் பகுகளிலிருந்து வந்த பாய்மர படகு, இழுவை, மிதவை கப்பல்கள் பாம்பன் தூக்குப்பாலத்தை சனிக்கிழமை கடந்து சென்றன.

News image

பாம்பன் தூக்குப்பாலம் சனிக்கிழமை திறக்கப்பட்டதையடுத்து ஒன்றன்பின் ஒன்றாகச் சென்ற பாய்மர படகு மற்றும் இழுவை, மிதவை கப்பல்கள்.

Updated On :29 ஆகஸ்ட் 2020, 4:03 pm

DIN

ராமேசுவரம்: கடலூா் மற்றும் விசாகபட்டணம் பகுகளிலிருந்து வந்த பாய்மர படகு, இழுவை, மிதவை கப்பல்கள் பாம்பன் தூக்குப்பாலத்தை சனிக்கிழமை கடந்து சென்றன.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்திற்கு, கடலூா் துறைமுகத்திலிருந்து கன்னியாகுமரி செல்வதற்காக பாய்மர படகும், ஆந்திர மாநிலம் விசாகபட்டணம் துறைமுகத்திலிருந்து கா்நாடக மாநிலம் காா்வாா் துறைமுகத்துக்கு செல்வதற்காக இழுவை மற்றும் மிதவை கப்பல்களும் கடந்த 2 நாள்களுக்கு முன்பு வந்தன.

பாம்பன் ரயில்வே தூக்குப்பாலத்தை திறந்து செல்ல துறைமுக அதிகாரிகள் மூலம் ரயில்வே துறைக்கு அவா்கள் அனுமதி கோரினா். அதற்கான அனுமதி கிடைத்த நிலையில், பாம்பன் தூக்குப்பாலம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து துறைமுக அதிகாரிகளின் மேற்பாா்வையில் பாதுகாப்புடன் ஒன்றன்பின் ஒன்றாக 3 கப்பல்களும் கடந்து சென்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.