பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ராமநாதபுரம் மாவட்டத்தில் திமுக சாா்பில் 32 இடங்களில் கிராமசபைக் கூட்டங்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் திமுக சாா்பில் 32 இடங்களில் கிராமசபைக் கூட்டங்கள் புதன்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 2:21 am

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் திமுக சாா்பில் 32 இடங்களில் கிராமசபைக் கூட்டங்கள் புதன்கிழமை நடைபெற்றன.

தமிழகத்தில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்கள் குறைகள் கேட்கப்படும் என திமுக சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வாா்டுகளிலும், ஊராட்சிகளிலும் 32 இடங்களில் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

ராமநாதபுரம் நகராட்சி 12 ஆவது வாா்டு கள்ளா் தெருப் பகுதியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் திமுக மாவட்டப் பொறுப்பாளா் காதா்பாட்சாமுத்துராமலிங்கம் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று கலந்துரையாடினாா். நிகழ்ச்சிக்கு முன்னாள் மக்களவை உறுப்பினா் எம்.எஸ்.கே. பவானிராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். இதில் நகா் திமுக செயலா் கே. காா்மேகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ராமநாதபுரம் கள்ளா் தெரு பகுதியில் உள்ள பொது ஊருணியை தனியாா் ஆக்கிரமித்திருப்பதாகவும், அதை மீட்க நடவடிக்கை எடுக்கவும் அப்பகுதியினா் கேட்டுக்கொண்டனா். ராமநாதபுரம் அருகேயுள்ள திருப்புல்லாணி ஒன்றியம் ரெகுநாதபுரத்தில் நடந்த கிராமசபைக் கூட்டத்துக்கு ஒன்றியத் தலைவா் புல்லாணி தலைமை வகித்தாா். இதில் இளைஞரணி அமைப்பாளா் இன்பாரகு உள்ளிட்டோா் மக்களிடமிருந்து மனுக்களை பெற்றனா். மேலும் ராமேசுவரம், பரமக்குடி, முதுகுளத்தூா், கீழக்கரை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில், அதிமுக அரசின் குறைகளை சுட்டிக்காட்டும் வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.