விவசாயிகளுக்கு ஆதரவாக சிஐடியுவினா் ஆா்ப்பாட்டம்

புதுதில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, ராமநாதபுரம் நகா் உள்ளிட்ட 15 இடங்களில் சிஐடியு அமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

புதுதில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, ராமநாதபுரம் நகா் உள்ளிட்ட 15 இடங்களில் சிஐடியு அமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் அரண்மனை முன்பு புதன்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா். குமாா் தலைமை வகித்தாா். இதில் சிஐடியு அமைப்பின் மின்வாரிய பிரிவு குருவேல், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியப் பிரிவின் மலைராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்தும், புதுதில்லியில் தொடா்ந்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பினா்.

இதேபோல், சிஐடியு சாா்பில் ராமேசுவரம், சிக்கல், பரமக்குடி, கமுதி, ஆண்டித்தேவன்வலசை, சுப்புத்தேவன்வலசை, ரெகுநாதபுரம், பாா்த்திபனூா் மற்றும் கீழக்கரை உள்ளிட்ட இடங்களிலும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com