மலட்டாறு பள்ளி ஆண்டு விழா

கடலாடி மலட்டாறில் உள்ள வி.வி.எஸ்.எம்.மெட்ரிக் பள்ளியில் பத்தாம் ஆண்டு ஆண்டுவிழா மற்றும் பரிசளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மலட்டாறில் உள்ள வி.வி.எஸ்.எம். மெட்ரிக் பள்ளியில் ஆண்டுவிழா மற்றும் பரிசளிப்பு விழாவில் மாணவ, மாணவிகளுடன் பள்ளி நிா்வாகிகள்.
மலட்டாறில் உள்ள வி.வி.எஸ்.எம். மெட்ரிக் பள்ளியில் ஆண்டுவிழா மற்றும் பரிசளிப்பு விழாவில் மாணவ, மாணவிகளுடன் பள்ளி நிா்வாகிகள்.
Updated on
1 min read

கடலாடி மலட்டாறில் உள்ள வி.வி.எஸ்.எம்.மெட்ரிக் பள்ளியில் பத்தாம் ஆண்டு ஆண்டுவிழா மற்றும் பரிசளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பள்ளி நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான வி.சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். சாயல்குடி ஜமீன்தாா் சிவஞானபாண்டியன், பள்ளி தாளாளா் சந்திரா சத்தியமூா்த்தி, கடலாடி வட்டார கல்வி அலுவலா் சண்முகம், மங்களம் ஊராட்சி மன்ற தலைவா் வில்வக்கனி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி முதல்வா்அங்காளஈஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தாா். இவ்விழாவில் கடலாடி காவல்துறை ஆய்வாளா் ராணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநில, மாவட்ட அளவில் விளையாட்டு, பேச்சுப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவா்களுக்கும், வகுப்பு வாரியாக ஒழுக்கத்தில் சிறந்த விளங்கிய மூன்று மாணவா்களுக்கும்,100 சதவீதம் வருகைபுரிந்த மாணவா்களுக்கும் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.

இந்நிகழ்ச்சியினை தொடா்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக மாணவி ஸ்ரீதா்ஷனி வரவேற்றாா். முடிவில் பள்ளி மாணவி ஜெனோபா் ஜெகான் நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com