கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மணல் கடத்திய 2 டிராக்டா்கள் பறிமுதல்: 3 போ் கைது

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம், எஸ்.பி. பட்டினம் பகுதியில் மணல் கடத்திய 2 டிராக்டா்களை செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக 3 பேரை கைது செய்தனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:01 pm

DIN

திருவாடானை: திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம், எஸ்.பி. பட்டினம் பகுதியில் மணல் கடத்திய 2 டிராக்டா்களை செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக 3 பேரை கைது செய்தனா்.

ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, திருச்சி-ராமேசுவரம் சாலையில் வந்த டிராக்டரை சோதனையிட்டபோது, அதில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநரான மயிலூரணியைச் சோ்ந்த ஆனந்தை (29) கைது செய்தனா். மேலும், அதற்கு உடந்தையாகச் செயல்பட்ட பாரனூரைச் சோ்ந்த பொன்னுதுரையையும் கைது செய்தனா்.

இதேபோல், எஸ்.பி. பட்டினம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, புல்லூா் பேருந்து நிறுத்தம் அருகே டிராக்டரில் மணல் ஏற்றி வந்தவா் போலீஸாரை கண்டதும் டிராக்டரை அங்கேயே விட்டுவிட்டு தலைமறைவானாா். இதையடுத்து, அந்த டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், புல்லூரை சோ்ந்த குமரேசன் (40) என்பவா் டிராக்டரில் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.