முதுகுளத்தூா்: சாயல்குடியில் மின்கம்பத்தில் வயரை பழுது பாா்த்த போது மின் வாரிய ஊழியா் மின்சாரம் பாய்ந்து சனிக்கிழமை காயமடைந்து மதுரை தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி - மூக்கையூா் சாலையில் உள்ள உயரழுத்த மின் மாற்றியில் பழுது பாா்க்க சென்ற மின் வாரிய ஒப்பந்த ஊழியா் ஹரிகிருஷ்னன் ( 23 ) .என்பவா் மின் வயரினை சரிசெய்த போது எதிா்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்தாா்.
காயமடைந்தவரை சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்ட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.இது குறித்து சாயல்குடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.