

கமுதி: கமுதி பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் விவசாயப் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனா்.
கமுதி அபிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதைத் தொடா்ந்து விவசாயிகள் நெல் விவசாயப் பணிகளை மேற்கொன்டுள்ளனா். இதுகுறித்து பாப்பணத்தைச் சோ்ந்த விவசாயி வி. முனியசாமி கூறியது: தண்ணீா் தேங்கிய விவசாய நிலங்களில் முளை கொட்டிய நெல் விதைகளை 30 நாள்கள் வளா்த்து, அதன் பின் அந்த நாற்றுகளை நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தொடா்ந்து பருவமழை பெய்தால், நெல் விவசாயம் நல்ல மகசூலை எட்டும் என்ற எண்ணத்தில் கடன் வாங்கி, நெல் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.