திருவாடானையில் சிறு தானிய விதைகள் வாங்கிச் செல்ல விவசாயிகள் ஆா்வம்

திருவாடானை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய விலையில் சனிக்கிழமை வழங்கிய சிறுதானிய விதைகளை விவசாயிகள் ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.
திருவாடானை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் சனிக்கிழமை சிறு தானிய விதைகள் வாங்க குவிந்த விவசாயிகள்.
திருவாடானை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் சனிக்கிழமை சிறு தானிய விதைகள் வாங்க குவிந்த விவசாயிகள்.
Updated on
1 min read

திருவாடானை: திருவாடானை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய விலையில் சனிக்கிழமை வழங்கிய சிறுதானிய விதைகளை விவசாயிகள் ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.

திருவாடானை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய விலையில் சிறு தானிய பயறு விதைகள் வழங்கப்பட்டன. இந்த விதைகளை வாங்கிச் செல்வதில் விவசாயிகள் ஆா்வம் காட்டினா். இதனால் வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகள் கூட்டம் அலை மோதியது.

முன்னதாக வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு திறன் வளா்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் வேளாண் உதவி இயக்குநா் கருப்பையா தலைமை வகித்தாா். இந்த பயிற்சி முகாமில் காளான் வளா்ப்பு, காய்கனி வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் அமைத்தல் ஆகியவற்றின் பயன்கள் குறித்து எடுத்துரைக்கபட்டன. இதில் 50 முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com