மணல் திருட்டு லாரி பறிமுதல்: இளைஞா் கைது

திருவாடானை பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனா்.
Updated on
1 min read

திருவாடானை பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனா்.

திருவாடானை போலீஸாா் சனிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வாணியேந்தல் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்றிருந்த டிப்பா் லாரியை சோதனையிட்டனா். அதில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

இது தொடா்பாக சிவகங்கை மாவட்டம் சாக்கூரைச் சோ்ந்த கனகவேல், அதே பகுதியைச் சோ்ந்த மணாளன்(26) ஆகிய 2 போ் மீது வழக்குப் பதிந்து மணாளனை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com